விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

     மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை- 
    ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*
    மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்* 
    கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காண் - கறுநாற்றம் கமழா நின்றுள்ள
தட - பெரிய
பொழில் - சோலைகளினால்
சூழ் - சூழப்பெற்ற
மூன்று எழுத்ததனை - அகரா, உகரா, மகரா ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை

விளக்க உரை

ருக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களினின்றும் அடைவே, பூ:பஙல், ஸுவ: என்ற மூன்று வயாஹ்ருதிகளையும் தோன்றுவித்து, பொன்வாணியன் பொன்னைப் புடபாகம் வைப்பதுபோல எம்பெருõமன் தனது ஸங்கல்பத்தினால் அவற்றை ஓடவைத்து, அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்களாகிற மூன்று அக்ஷரங்களைத் தோன்றுவித்து, அம்மூன்றையும் ஸந்தி கிராமத்தில் ‘ஓம்’ என்று ஏகாக்ஷரமாக்கி இப்படி ஏகாக்ஷரமாக்கப்பட்ட மூன்றக்ஷமாகிய பிரணவத்தை நிருத்திக்ரமத்தினால் (அதாவது- ப்ரக்ரியை பண்ணும் மூன்றுபதமாய் மூன்று அர்த்தங்களுக்கு வாசகமாயிருக்கும் அகார உகார மகாரங்களாகிய மூன்றெழுத்தாகப் பிரித்து அவற்றுள் அகாரம் ஜீவாத்துமாவுக்குள் பகவச்சேஷத்துவத்தைக் கூறுகை. யாலும், உகரம் அவதாரணாத்தத்தைக்கூறி, அதனால் கீழ்ச்சொன்ன சேஷத்துவம் ஸ்ரீமந்நாராணன் பக்கலிலன்றி வேறுடத்து வஹிக்கத்தகாதது என்று மிடத்தைத் தெளிவிக்கையாலும், மகாரம் “மக-ஜ்ஞாநே” என்கிற தாதுவினின்றும் பிறந்து ஞாலத்தைக் கூறுமதாயும், அநந்யார்ஹ சேஷத்வத்துக்கா ஆசரயமான ஆத்துமா தேஹம் முதலியவற்றிற்காட்டில் விலக்ஷணன் என்று புலப்படுத்துமதாயு மிருப்பதாலும், இம்மூன்றெழுத்தையுமே தமக்குத் தஞ்சமாக நினைத்து அநுஸந்திருக்குமலர் பக்கலில் பரமகிருபையைச் செய்தருள் பலனும், அந்தப்ரணவத்தை நம பத நாராண பதங்களோடு கூட்டி மூன்று பதமாக வளர்த்து, அம்மூன்று பதங்களிலும் ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்வம், அநந்யபோக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களையும் தோன்றுவித்து, அவ்வாகாரங்களுக்கு எதிர்த்தட்டாகத்தான் சேஷித்தவம், சரண்யத்வம், ப்ராப்பயத்வம் என்கிற மூன்று ஆகாரங்களையுடையது எம்பெருமாள் எழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னுங் கடிநகராம். மூன்றெழுத்தனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி” - பிரித்துப் பார்த்தால் மூன்றெழுத்தாகத் தோன்றும்படியாய், ஸ்தூலதர்சநத்தில் ஏகாக்ஷமாகத் தோற்றும்படியாயுள்ள ‘ஓம்’ என்கிற பிரணவத்தை நிர்வாசக்ரமத்தினால் மூன்றெழுத்தாகப் பிரித்து என்றபடி. என்ற ஸ்ரீரங்கராஜன் தவஸூக்தியின்படி நிர்வசநத்துக்கு வசநமாவது- என்கிற சுதி என்ற சொல் அக்ஷாத்ரயாத்மகமானது பற்றி ‘மூன்றெழுத்ததனால்’ என்றாரென்க. நிருக்தம்- வேதாங்கங்கள் ஆறனுள் ஒன்று. மூன்றாமடியில், தோன்றி- பிறவினையில் வந்த தன்வினை.

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga surrounded by fragrant groves. The three syllables A-U-M, by three-syllable Nirukta, become the three, Akara-Ukara-Makara. Contemplating the three syllables OM expanded to three words with Namo-Narayanaya shows the three aspects of the Atman in three relationships with the Supreme manifested in three forms.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்