விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஈந்தனன் ஈயாத இன்னருள்*  எணிண்ல் மறைக்குறும்பைப்-
    பாய்ந்தனன்*  அம்மறைப் பல்பொருளால்,*  இப் படியனைத்தும்-
    ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை*  வேர்பறியக்-
    காய்ந்தனன்*  வண்மை இராமாநுசற்கு என் கருத்தினியே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈயாத - (இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத;
இன் அருள் - விலக்ஷணமான க்ருபையை;
ஈந்தனன் - அடியேனுக்குச் செய்தருளின வரும்;
எண் இல் மறை குறும்பை - எண்ணிறந்த      வேத விரோதிமதங்களை;
அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன் - அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும்;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் தாம் அபேக்ஷித்தபடியே திருவருளைத் தந்தருளப்பெற்று, க்ருதக்ருத்ய ராய், அவர் செய்தருளின உபகாரங்களை அநுஸந்தித்து, இவையெல்லாம் செய்தபின்பு இன்னமும் செய்தருள்வதாகத் திருவுள்ளம் பற்றிருப்பது எதுவோ என்கிறார். மறைக்குறும்பாவது- வேதத்திற்கு மாறாகச்சொல்லும் தப்புப் பொருள்கள். ஈந்தனன் பாய்த்தனன், எய்ந்தன், காய்ந்தனன், என்பவற்றை வினைமுற்றாகலே கொண்டு உரைத்தலுமாம்.

English Translation

Ramanuja showered his benevolent grace beyond the mind's imagination. With the authority of Vedic texts he has cleared the path of heretic thoughts. His fame has spread all over the world. He has weeded out my karmas by the root. I wonder what the able one intends to do next.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்