- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(இடங்கோள்) உலகத்திலே மிகச்சிறந்த வஸ்துக்கள் ஸ்வல்பமாகவும் உபயோகமற்ற வஸ்துக்கள் அபரிமிதமாகவும் விளைவது இயல்பு. ஸங்கல்பஸூச் யோதயத்தில் தேசிகன் “*********** - ஸர்வத ; கரவீராதிந் ஸூதே ஸாகரமேகலா, ம்ருதஸஞ்ஜீவிநீ யத்ர ம்ருக்யமாணதசாம் கதா”. என்றொரு சுலோக மருளிச்செய்கிறார்; இந்நிலத்தில் சந்சுப்பூண்டுகளான அலரி முதலியவை மிகைமிகையாக விளைகின்றன; உயிரைமீட்கும் ஓஷதிகள் மாருதிபோல்வார் பாடுபட்டுத் தேடிப் பிடித்துக் கொணரவேண்டும்படி மிகவும் அருமைப்பட்டிருகின்றனவென்பது அந்த சுலோகத்தின் கருத்து. இதுபோலவே இவ்வுலகில் பாஹ்யமதங்கள் குத்ருஷ்டிமதங்கள் என்று சொல்லப்படுகிற தீயமதங்கள் மலிந்தும், ஆஸ்திகமதம், வைதிகமதம் என்று உண்மையில் சிறப்பித்துக் கூறப்படுகிற மதம் மிக விரளமாயுமிருக்கும். அங்ஙனம் மலிந்து கிடக்கிற துஷ்ட மதங்களையெல்லாம் பறித்துப் பொகடுவாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்கள் மலிந்துவிட்டார்களென்கிறார். இதன் கருத்து என்னென்னில்;* யெ *** = யே கண்டலக்நதுலுஸீநலிநாக்ஷமாலா; யே பாஹுமூலபரிசிஹ்நிதசங்கக்ரா யே வா லலாடபலகே லஸதூர்த்வபுண்ட்ரர்தே வைஷ்ணவா புவகம் ஆசு பவித்ரயந்தி. * இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே ஸ்ரீவைஷ்ணவசிகாமணிகள் காணவினிய அழகிய லக்ஷணங்களில் குறைவின்றியே பளபளவென்று விளங்கும் படியைக் கண்டால், கண்டகாட்சியிலேயே அலைவதிகமதங்க் அவிந்துபோமத்தனை. விளக்கு வரக் கண்டவாறே இருள் தன்னடையே சிதைந்தொழியுமா. போலே ஸ்ரீவைஷ்ணவர்களின் லக்ஷண அமைதியைக் கண்டவாறே அவலுண மதங்கள் அவிந்துபோகத் தட்டுண்டோ?
English Translation
All the heretic schools of thought are being cleared like weeds. The spirits of our mighty ocean-reclining Lord are singing many, many songs. –lying, sitting, standing, walking, flying and dancing, they are performing miraculous plays.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்