விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாடி நீர் வணங்கும் தெய்வமும்*  உம்மையும் முன்படைத்தான்,* 
    வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்*  அவன் மேவி உறைகோயில்,* 
    மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனைப்* 
    பாடி ஆடி பரவிச் செல்மின்கள்*  பல் உலகீர்! பரந்தே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பல் உலகீர் - பலவகைப்பட்ட உலகர்களே!
நீர் - நீங்கள்
நாடி - தேடி
வணங்கும் - வணங்கும்படியாகவுள்ள
உம்மையும் - உங்களையும்

விளக்க உரை

உலகர்களே! நீங்கள் எந்த தெய்வங்களைப் பணிகின்றீர்களோ, அந்த தெய்வங்களோடு உங்களோடு ஒரு வாசியில்லை; நீங்கள் எப்படி கார்யபூதர்களோ அப்படியே அவர்களும் கார்யபூதர்களேயல்லது காரணபூதர்களல்லர்; ஆகையாலே, அவர்களை நீங்கள் ஆச்ரயிப்பது போல உங்களையும் அவர்கள் ஆச்ரயிக்கலாம். உங்களைக்காட்டிலும் அவர்களுக்குச் சிறிது ஞானமும் சக்தியும் ஏறியிருக்கிறது என்கிற இவ்வளவேயல்லது வேறொரு வாசியில்லைகிடீர்; உங்களோடு அவர்களோடு வாசியற அனைவர்க்கும் காரணபூதனான ஸ்ரீமந்நாராயணன் காட்சி தந்தருளுமிடமாகிய திருநகரியைப் பணியுங்கோளென்கிறார். நீர்நாடிவணங்கும் தெய்வமும்-நாடுதலாவது தேடுதல்; உங்களால் தேடிவணங்கப்படுகிற தெய்வங்களையும் என்றபடி. “***“சாஸ்த்ரங்களானவை என்று பரமபுருஷனைத் தேடவேண்டு மென்று சொல்லாநிற்கஇ அந்தோ! நீங்கள் காபுருஷா;களைத் தேடி யோடுவதே! என்று கர்ஹிக்கிறபடி. எம்பெருமான் உங்களைத் தேடாநிற்கஇ நீங்கள் நீசர்ர்களைத்தேடியோடாநின்றீர்களே! என்றுமாம். இங்கே நம்பிள்ளையீடு;-“கள்ளரைத் தேடிப்பிடிக்குமாபோலே தேடிப் பிடிக்க வேண்டி யிருக்கிறபடி; ஆடு திருடினகள்ளாரிறே இவர்கள்தாம்;. -ஜீவஹிம்ஸையையே ஆராதனமாகக்கொண்டிருக்கிற கூஷூத்ர தெயவங்களென்று காட்டினபடி.

English Translation

O Men of the world! Then He created you and the gods you worship. With unending goodness and frame, he resides willingly in kurugur, temple town with balconied mansions all around, sing and dance and praise him, roaming everywhere

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்