விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தணியும் பொழுது இல்லை*  நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,* 
    பிணியும் ஒழிகின்றது இல்லை*  பெருகும் இது அல்லால்,* 
    மணியின் அணிநிற மாயன்*  தமர் அடி நீறுகொண்டு* 
    அணிய முயலின்*  மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிணியும் ஒழிகின்றது இல்லை - நோயோ தீர்கின்றதில்லை;
இது அல்லால் - நோய்தீராத மாத்திரமேயன்றிக்கே
பெருகும் - மேன்மேலும் வருத்தியுமடைந்து வருகின்றது;
இஅணங்குக்கு - இப்பெண்பிள்ளைக்கு
மணியில் அணி நிறம் - நீலமணியிற்காட்டிலும் அழகிய நிறம்படைத்த

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமன்தணியுமே” என்று கூறின தோழியை நோக்கித் தாய்மார் “நீ சொல்லுகிறபொடி இன்னதென்று தெரியவில்லையே!; விளங்கச்சொன்னால் நலம்” என்ன் அதனை விளங்கவுரைக்கின்றாளிப்பாட்டில். அந்தோ! சிறுபிள்ளைகள் போலே நீங்கள் செய்கின்றீர்களே!; (அதாவது) ஏதாவதொரு காரியத்தைச் சிறுபிள்ளைகள் செய்யாநின்றால் அதில் தகுதியின்மை கண்டு பெரியார் மறுத்தால், அப்பிள்ளைகள் அக்காரியத்தையே மேன்மேலும் பிடிவாதமாய் வலிந்து செய்து போருவது வழக்கம். அப்படியே நீங்களும் நான் மறுப்பதே ஹேதுவாகப் பிடிவாதங்கொண்டு வெறியாட்டந்தனையே விடாது செய்விக்கின்றீர்களே!; இதனால் பிணி ஒழியாததோடு பெருகிச் செல்லவுங்காணா நின்றோமே! என்கிறாள் முன்னடிகளில். நீலமணிவண்ணனான எம்பெருமானுடைய வடிவழகிலீடுபாடு கொண்ட பரம பாகவதர்களின் ஸ்ரீபாததூளியைக் கொண்டுவந்து…என்று இவள் சொல்லத் தொடங்கும் போதே தாய்மார்கள் ‘இவ்வரும் பெரும்பொருள் நமக்குக்கிடைக்க வழி எது? மிகவும் துர்லபமான வஸ்துவைச் சொல்லுகின்றாயே!, இது ஸம்பாதிப்பது கஷ்டமாயிற்ளே!’ என்று சொல்ல; அன்னைமீர்! மாயன்தமரடி நீறுதன்னைக் கொண்டுவரவேண்டர் ‘அதைக்கொண்டு வரவேணும்; இவளுக்கு அதையிடவேணும்’ என்ற மநோரதித்தாலும் போதும்; அவ்வளவிலேயே நோய் தீர்ந்ததாகும், பாருங்கோள் என்கிறாள்.

English Translation

O Ladies, dancing like ones possessed! Know that this will be of no avail. Her fever will only increase, not subside. Apply the dust from the feet of devotees. Other than this, there is no cure for her spirits

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்