- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“பலகாலும் கூவியுங் காணப்பெறேனுன கோலமே” என்ற தம்மைக் குறித்து எம்பெருமான் ‘உம்முடைய அபேக்ஷிதம் பூர்த்திசெய்கைக்கீடான காலம் வரவேண்டாவோ? என்று அருளிச்செய்ததாகக்கொண்டு, ‘காலமும் நீயிட்ட வழக்கன்றோ? நான் இழக்கக் தகுமோ?’ என்கிறார். கோலமே!= கோலம் என்று அழகுக்குப் பெயர்; அழகியவனே! என்று சொல்லவேண்டியிருக்க அழகே! என்றது- ‘அழகுதானே ஒரு வடிவெடுத்தது’ என்னலாம்படியிருக்கையாலே. இவ்விடத்தில் ‘அழகே விஞ்சி அத்தையிட்டு நிரூபிக்க வேண்டும்படி யிருக்கையாலே கோலமே யென்கிறார்” என்ற ஈடு காண்க. தாமரைக்கண்ணதோர் அஞ்சனநீலமே!= கீழ்ச்சொன்ன அழகுக்கு ஆச்ரயம் திருமேனி: அந்தத் திருமேனிக்குள்ளே மிகச் சிறந்தது கண்ணழகு; அதனை யநுபவிக்கிறபடி. “க: புண்டரீகநயந: ” என்னலாம்படியன்றோவிருப்பது. அஞ்சன நீலமே என்பதை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள். அஞ்சனமே, நீலமே! என்று இரண்டு விளியாகப் பிரித்தல், அஞ்சன த்ரவ்யத்தின் நீலநிறந்தான் வடிவானவனே! என்னுதல்.
English Translation
O My Lord of beautiful lotus eyes, and a hue dark as collyrium, O Good one breaking my heart! O Bearer of the past, present and future! When, O when will I see you to my fil?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்