விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்*  வந்து மண்ணும் மணமும் கொண்மின்* 
    கூழாட்பட்டு நின்றீர்களை*  எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம்*
    ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்*  இராக்கதர் வாழ்*  இலங்கை 
    பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்*  பல்லாண்டு கூறுதுமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்றீர் - நிலைத்து நின்றவர்கள்;
உள்ளீர் எல் - இருப்பீர்களாகில்;
வந்து - (நீங்கள் எங்களோடே) வந்து சேர்ந்து;
மண்கொள்மின் - (எம்பெருமானுடைய உத்ஸவார்த்தமான (திருமுளைத் திருநாளுக்குப்) புழுதி மண் சுமவுங்கள்;
மணமும் கொள்மின் - (அந்த உத்ஸவத்துக்கு) அபிமாகிகளாகவும் இருங்கள்;

விளக்க உரை

ஆழ்வார் தனிமையிலே எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுவதில் திருப்தி இல்லாமலும், மிகவும் போக்யமான வஸ்துவை தனித்து அனுபவிப்பது தகாது என்ற நியாயமான காரணத்தாலும் இந்த பல்லாண்டு பாடும் கைங்கர்யத்திலே எல்லோரையும் ஈடுபடுத்த திருவுள்ளம் கொண்ட ஆழ்வார், உலகத்திலே உள்ள மூன்று விதமான அதிகாரிகளான செல்வத்தை விரும்புபவர்(இழந்த செல்வத்தை தேடுபவர்களும் அடக்கம்), ஆத்மானுபவத்தை விரும்புபவர், பகவத் அனுபவத்திலே ஈடுபடுவோர் ஆகிய எல்லோரையும் அழைப்பதாக அமைந்த பாசுரங்கள் ஆகும் இவை அனைத்தும். மேலே அழைக்கப்பட்ட முதல் இரண்டு அதிகாரிகளும் அல்பப் பயன்களுக்காக இப்படி எம்பெருமானைப் பணிந்து வழிபடுகிறார்களே என்று சற்று யோசித்த ஆழ்வார், அவர்களையும் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று நிச்சயித்து அவர்களையும் மங்களாசாசனத்துக்கு அழைக்க திருவுள்ளம் கொண்டு, முதலிலே பகவத் அனுபவத்திலே ஈடுபடும் அதிகாரிகளை பல்லாண்டு பாட அழைக்கிறார் இந்த மூன்றாம் பாசுரத்தாலே. எம்பெருமானின் திருவடிகளில் கைங்கர்யம் செய்து உஜ்ஜீவனம் அடைய விருப்பம் உள்ளவர்களாகில், நீங்கள் எங்களுடன் சேர்ந்து எம்பெருமானுடைய உத்சவத்துக்கு அபிமானிகளாகவும், புழுதிமண் சுமப்பவர்களாயும் இருங்கள்; (கூழாட்பட்டு) சோற்றுக்காக பிறரிடத்தில் அடிமைப் பட்டு இருப்பவர்களை இந்த கோஷ்டியிலே சேர்க்கமாட்டோம். நாங்களோ ஏழு தலைமுறையாக குற்றம் இல்லாதவர்களாயும், ராக்ஷசர் வசிக்கிற இலங்கையில், வானரப் படைகளைக் கொண்டு யாவரும் அழிந்து போகும்படி போர் செய்த எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுபவர்களாயும் இருக்கின்றோம் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த பாசுரத்திலே.

English Translation

You that stand and suffer life, come! Accept talc paste and fragrances. We shall not admit into our fold those who are slaves of the palate. For seven generations, pure hearted, we have sung the praises of Kodanda Rama who launched an army and destroyed Lanka, the demon’s haunt.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்