விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துன்னு வெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால்,*
    மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,*

    அன்ன நடைய அணங்கு நடந்திலளே?,*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொடு கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பால் மேல் - உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்வியபருக்கைக் கற்களின்மேலே (எழுந்தருளின வளவிலே)
வைதேவி என்று உரைக்கும் - வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய்
மன்ன்ன் இராமன் பின் - அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே
பஞ்சு அடியால் - பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே
நடந்திலளே - தானும் நடந்து செல்லவில்லையா?

விளக்க உரை

தாத என்ற வடசொல் தாதையெனத் திரிந்தது. வலங்கொண்டு – (பலம்) என்ற வடசொல் வலமெனத்திரிந்தது. மனவலிவைச் சொல்லுகிறது. கொண்ட காரியத்தைக் குறையறத் தலைக்கட்டியே விடும்படியான அத்யவஸாயம். மன்னும் வளகாடு –மன்னும் –குலக்ரம்மாகத் தனக்கு ப்ராப்தமான என்றுமாம். மாதிரங்கள் –மாதிரம் என்று ஆகாயத்துக்கும் திசைக்கும் பூமிக்கும் மற்றும் பலவற்றுக்கும் வாசகம் “விண்டேர் திரிந்து“ என்று பாடம் வழங்கிவந்தாலும் வெண்டேர் என்றே உள்ளது பிரயோகங்களும் அப்படியே. வடமொழியில் ம்ருகத்ருஷ்ணா என்று சொல்லப்படுகிற கானல் தமிழில் வெண்டேர் என்றும் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும். வெளிப்பட்டு –செடி மரம் முதலியவை இருந்தால் வெய்யிலுக்கு அவற்றின் நிழலில் ஒதுங்கலாமே, அப்படி ஒன்றுமில்லாமல் பார்த்த பார்த்த விடமெல்லாம் வெளி நிலமாயிருக்கை. கல்நிறைந்து – வழிமுழுவதும் க்றகள் நிரம்பியிருக்கும். தீய்ந்து எனினும் தீந்து எனினும் ஒக்கும். மருகாந்தாரங்களிற் கண்ட விடமெங்கும் தீப்பற்றி எரிந்துகிடக்குமாய்த்து. கழை –மூங்கில். வெய்யிலின் மிகுதியினால் மூங்கில்கள் வெடித்துக்கிடக்கும் கால்சுழன்று எங்கும் சூறாவளியாய்க்கிடக்கும். சூறாவளி – சுழல் காற்று, மனிதரைத்தூக்கி யெறியுங்காற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்