விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*  அரவப்-பகை ஊர்தி அவனுடைய*  
    குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*
    திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்*  பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்* 
    பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரவம் - காளியநாகத்தை;
துரந்திட்டு - ஒழித்தருளினவனும்;
அரவம் பகை ஊர்தி - ஸர்ப்பசத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய;
குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் - குரவமரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து அமைந்திருக்கப்பெற்ற;
கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல் - கோவர்த்தனமென்ற கொற்றக்குடை விஷயமாக;

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் - இப்பாட்டால். திருவாய்ப்பாடியிற் பிறந்த காளியன் கொழுப்பையடக்கின கண்ணபிரான் க்ஷீராப்திசாயியும் கருடவாஹநனுமான ஸாக்ஷாத் பரமாத்துமா என்பதைத் தெளிவிக்கும்-முதலடி. அரவப் பகையூர்தியவனுடைய-அவன் எடுத்துதரித்த என்றவாறு, குரவமரமும் அதன்மேற் பரந்த கொடிமுல்லையும் நின்றுறங்கு மென்றது-தன்மை நவிற்சி, நன்கு பரவும் மனமுடை என்று மியைக்கலாம்: நன்கு-கு என்ற விகுதிபெற்ற பண்புப்பெயர். “வைகுந்த நண்ணுவரே” எனச் சந்தியாக வேண்டுமிடத்து, “வைகுந்த நண்ணுவரே” என நகரவொற்று மிக்கது, செய்யுளோசை நோக்கி; விரித்தல் விகாரம். (கக)

English Translation

This decad of songs by Pattarbiran of Srivilliputtur adorned by meritorious Vedic seers, sings of Govardhana mount, victoriously held as an umbrella by the Lord who sleeps on one serpent, Ananta, drove away another, Kaliya, and rides the enemy of them all, Garuda, Devotees with a heart to sing it well will enter Vaikunta, the highest abode.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்