விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா* 
    நீர்ஏதும் அஞ்சேல்மின் நும்மகளை நோய்செய்தான்*
    ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்* 
    கூரார் வேல்கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ*
    ஆரால் இவ்வையம் அடிஅளப்புண்டதுதான்* 
    ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது*-- மற்று
    ஆராலே கல்மாரி காத்ததுதான்* -- ஆழிநீர் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நும்மகளை நோய் செய்தான் - உங்கள் பெண்ணை (இப்படி) நோவு படுத்தினவன்
ஆரானும் அல்லன் - யாரோ ஒரு ஸுத்தர புருஷனல்லன் (தேவதாந்தரங்களினால் வந்த நோய் அல்ல இது)
அவனை நான் அறிந்தேன் - நோவுபடுத்தின புருஷனை (இன்னானென்று) நான் தெரிந்துகொண்டேன்,
கூர் ஆர் வேல் கண்ணீர் - கூரிய வேல் போன்ற கண்களையுடைய நங்கைமீர்களே!
உமக்கு அறிய கூறுகேனோ - உங்களுக்கு (அவனைத் தெரியச்சொல்லட்டுமா?

விளக்க உரை

வாய்விட்டுச் சொல்லமுடியாமல் நிலைதடுமாறி எம்பெருமானுடைய அநுஸந்தானம் முற்றவே தந்மயமாயிருகுந் தன்மையை அடைந்தாள், “விரை குழுவு நறுத்துளவம் மெய்ந்நின்று கமழுமே“ என்றாற்போலத் திருத்துழாய் மணம் மணக்கத் தொடங்கிற்று, கையை மோந்து பார்த்தாள், திருத்துழாய்ப் பரிமளம் நன்றாகத் தோன்றிற்று, ஸஹஸ்ர நாமங்களை யுடையனான எம்பெருமானை (இவளது நோய்க்கு நிதாநம்) என்று நிச்சயித்தாள். எந்தத் திருமேனியைக்கண்டு நான் இந்நோய் பெற்றேனோ அந்தத் திருமேனியை அபிநயித்துக் காட்டினாள். வலங்கையாழி இடங்கைச் சங்கமுடைய பெருமானென்று அபிநயித்தாள், (“கையதுவும் சீரார் வலம்புரி“) என்று சங்கை மாத்திரம் சொல்லியிருந்தாலும் இது சக்கரத்துக்கும் உபலக்ஷணமாமென்க) “தோளிணை மேலும் நன் மார்பின்மேலும் சுடர் முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந் துழாயுடையம்மான்“ என்பதாக அபிநயித்தாள். அதற்குமேல், வாய்விட்டு சிலவார்த்தைகள் சொல்லத்தொடங்கி “அம்மனைமீர்! நீங்கள் இந்நோய்க்குச் சிறிதும் அஞ்சவேண்டா, நும்மகளன்றோ இவள், உங்கள் வயிற்றிற் பிறந்த விவளை க்ஷுத்ரதேவதைகள் தீண்டுமோ? எந்த நாயும் தீண்டிற்றில்லை, தீண்டின மஹாபுருஷனை நானறிந்தேன், இப்போது நான் அபிநயித்துக்காட்டின வகைகளாலே நீங்கள் தெரிந்துகொண்டிருக்கக் கூடுமாயினும் ஸுஸ்பஷ்டமாக நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு அன்னவனை குணசேஷ்டிதாதிகளுடன் விளங்கச் சொல்லுகிறேன் கேளுங்கள் – என்று நோய் செய்த எம்பெருமானைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கத் தொடங்கினாள். எறியா, வேரா, விதிர்விதிரா, சிலிரா, மோவா என்பன – செய்யாவென்னும் வாய் பாட்டிறந்தகால வினையெச்சங்கள், எறிந்து, வேர்த்து, விதிர்விதிர்த்து, சிலிர்த்து, மோந்து என்றபடி. “என்றாள்“ என்றும் “கட்டுரைத்தாள்“ என்றும் உள்ளவை – கட்டுவிச்சி தன் நெஞ்சினுள்ளயே சொல்லிக்கொண்டதைச் சொல்வன. “கீழ் சொன்னதடைய ஸ்வகதமாகச்சொன்னாள்“ என்றார்பெரியவாச்சான் பிள்ளையும். கட்டுரையா –இதுவும் இறந்தகால வினையெச்சம் உரைத்து என்றபடி.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்