விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆம்ஆறு அறிவுடையார்*  ஆவது அரிதுஅன்றே?* 
    நாமே அதுஉடையோம் நல்நெஞ்சே,*-பூமேய்-
    மதுகரம்மே*  தண்துழாய் மாலாரை,*  வாழ்த்துஆம்- 
    அதுகரமே அன்பால் அமை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலாரை - (ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது - வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால் - பக்தியுடன்
கரமே - திண்ணமாக
அமை - ஊன்றியிரு.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைப் பேசினார்; அது நம் நெஞ்சுக்கு மிகவும் ரஸித்தது. அந்த ஸௌலப்யத்தையே நெஞ்சு அநுஸந்தித்து ஆநந்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆழ்வார் அந்த நெஞ்சை நோக்கி “இப்படிப்பட்ட ஸௌலப்யம் எம்பெருமானுக்குள்ளதென்று நீ நன்கு அறிந்து கொண்டாயன்றோ; இந்த அறிவு எல்லார்க்கும் எளிதாக உண்டாமதன்று; ஏதோ எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம்; ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே அப்பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற அத்யவஸாயத்தைத் திண்ணியதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார். ஆமாறறிவுடையாராவது அரிதன்றே = ஸாமாந்யமாக அறிவு என்பது எல்லார்க்குமிருந்தாலும் அஃது ஆமாறறிவு அல்ல; ஸத்தை பெறுதற்கு உறுப்பான அறிவு அல்ல என்றபடி. எம்பெருமானுடைய உத்தம குணத்தை அநுஸந்திப்பதாகிற நல்லறிவு எல்லார்க்கும் உண்டாகக்கடவதன்றே; தைவாதீனமாக அது நமக்கே உண்டாகப்பெற்றோம் என்கிறார். “நான் அறிவில்லாதவன்” என்று சொல்லிக்கொள்ள வேண்டியதன்றோ ஸ்வரூபம்; அப்படியிருக்க “நாமே நல்லறிவு உடையோம்” என்று சொல்லிக் கொள்ளுதல் தற்புகழ்ச்சியாகதோ? எனின்; ஆகாது. “மயர்வற மதிநல மருளினன் யவனவன்” என்று முதலடியிலே அருளிச் செய்தது தற்புகழ்ச்சியாமாகில் இதுவும் அங்ஙனேயாம். எம்பெருமானது திருவருளாலே பெற்ற பேற்றை ஸந்தோஷமிகுதியாலே வெளியிடுகிறாரித்தனை. நல் நெஞ்சே! = *** மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷியோ” என்ற நல்வழி போவதற்கும் தீ வழிபோவதற்கும் அவரவர்களுக்கு நெஞ்சே காரணம் என்று சாஸ்த்ரம் சொல்லியிருப்பதனால், நெஞ்சைப் பாராட்டி விளிக்கின்றார்: எப்போதும் தமக்கு நன்மையே புரிவதற்காக. (பூ மேய் இத்யாதி.) பூவிலே பொருந்தும் வண்டுகள் சேர்ந்திருந்துள்ள திருத்துழாயை அணிந்திராநின்ற ஸர்வேச்வரனை அன்பினால் மங்களாசாஸநம் பண்ணுகையாகிற ஒரு காரியத்தையே சிக்கனப் பிடித்துக்கொள் என்று தம் திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று. கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யம் சொன்னாரே; அது மாத்திரமல்ல; அவனுடைய போக்யதையும் ஒப்பற்றது என்கிறார் இதில். மாலாரை என்றதனால் ஆச்ரிதர் திறத்திலே வ்யாமோஹங் கொண்டிருக்கையாகிற சீலகுணம் சொல்லுகிறது. ** என்ற வடசொல் இங்கே கரமெனத் திரிந்தது. அவ்வடசொல்லுக்கு த்ருடம் என்று பொருள்.

English Translation

Seeing his multitudinous forms, the he there, the he here, the he betwixt, and the he in the sky, do not get confused, know the Krishna alone pervades all, and worship him. He will appear in all the forms you desire.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்