விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நல்லார் நவில் குருகூர் நகரான்,*  திருமால் திருப் பேர்-
    வல்லார்*  அடிக் கண்ணி சூடிய*  மாறன் விண்ணப்பம் செய்த-
    சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
    பொல்லா அருவினை*  மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமால் - லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர் - திருநாமங்களை
நல்லார் - பயின்றவரான அடியார்களுடைய
அடி - திருவடிகளாகிற
கண்ணி - பூமாலையை

விளக்க உரை

இப்பிரபந்தம் கற்றார் பெறும் யுரைத்து தலைக்கட்டுகிறது இப்பாசுரம் ஆகவே இது நூற்பயன். ஞான மனுட்டானமிவை நன்றாகவேயுடையரான ஆசார்யரைச் சரணமாக வடைந்து அவரது ஸம்பந்தமூலமாக எம்பெருமானை யநுபவிக்கிற மதுரகவிகள் போல்வாரான நல்லவர்களால் புகழ்ந்து கூறப்பெற்ற இக்குருகூரென்று ப்ரஸித்தமான திருநகரியில் திருவவதரித்துவரும் பகவதபாகவத விஷயத்தில் பக்தி மிகுந்தவருமான ஆழ்வராலே விண்ணப்பஞ் செய்யப்பட்டதாய், எம்பெருமானும் பிறரும் தலைமேற் கொண்டு ஆதரிக்கத் தக்க இனியபாமாலையாகிய இத்திவ்யப்பிரபந்தத்தைக் கற்று வல்லவர்கள் அரும்மொழியப்பிறப்பற்று முக்திபெறுவரென்று பயனுரைக்கப்பட்டதாயிற்று. குருகூர்க்கு ‘நல்லார்நவில்’ என்ற விக்ஷேணமிடட்தனால், அப்படிப்பட்ட திவ்ய தேசத்தில் பிறந்ததனால்தான் தமக்கு இப்படிப்பட்ட பக்திப் பெருகாதல் உண்டாயிற்று என்பதாகத் தொணிக்கும். இப்படி லோக விலக்ஷணராண ஆழ்வார் திருவலதரிக்கப்பெற்ற திருநகரியை நல்லவரர் நவிலச் சொல்லவேணுமோ?

English Translation

The lord Tirumal is worshipped by good devotees in kurugur city. This work of a hundred verses was sung by Maran satakopan who wears the feet of those who recite his names as a garland around his neck. Those who master it will never get stuck in the mysterious quagmire of miserable births.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்