விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஈனச் சொல் ஆயினும் ஆக,*  எறி திரை வையம் முற்றும்*
    ஏனத்து உருவாய் இடந்த பிரான்,*  இருங் கற்பகம் சேர்-
    வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*
    ஞானப் பிரானை அல்லால் இல்லை*  நான் கண்ட நல்லதுவே (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈனம் சொல் ஆயினும் ஆக - (என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம் - வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
எனத்து உரு ஆய் கிடந்த - வராஹமீர்த்தியாய்க் கோட்டாற் குத்தி யெடுதபுதுவந்த
பிரான் - தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் - பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்

விளக்க உரை

முன்பு பிரவாய வெள்ளத்தில் மூழ்கிப்போன பூமியை உத்தரணஞ் செய்து நிலைநிறுத்திய மஹோபகாரகனையே நான் ஸம்ஸாரப் பெருங்கடலினின்று என்னை வீடேற்றுதற்குத் தஞ்சமாக நினைத்திருப்பேனென்று ஆழ்வார் தம்முடைய திருவுள்ளவுறுதியை அன்பர்க்கு வெளியிடுகிறார். ‘இப்போது நான் வெளியிடுகிற என்னுடைய ஸித்தாந்தம் அறம்பொருளின்பங்களையே தங்சமாக நினைத்து தேஹா«த்மாபிமாநங் கொண்டு பகவத் விஷயத்தில் விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் இகழும்படியான இழிந்த சொல்லாயினும் ஆகுக; என்னுடைய உறுதியை வெளியிட்டே தீரவேனென்கிறார் முந்துற முன்னம் ஈனச்சொல்லாயினுமாக என்றதனால். குழந்தை கிணற்றில் விழுந்தவாறே உடன் குதித்து அதனை யெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளங்கொண்டவாறே உடன் குதித்து அதனையெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளயங்கொண்டவாறே முழுகியெடுத்து மஹேபாகாரனையன்றி மற்றொருவனையும் அடைக்கலம் புகமாட்டேனெற்றாயிற்று.

English Translation

To the celestials in the sky, the mortals on Earth and to all others, here is what I know and declare; Other than the lord of knowledge, the lord who came as a boar and lifted the Earth, there is no god, if these words be fowl, let them be.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்