விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முலையோ முழு முற்றும் போந்தில,*  மொய் பூங் குழல் குறிய- 
    கலையோ அரை இல்லை நாவோ குழறும்,*  கடல் மண் எல்லாம்-
    விலையோ என மிளிரும் கண் இவள் பரமே!*  பெருமான்-
    மலையோ*  திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முலையோ - ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில் - மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல் - அடர்ந்த மென்மையான தலைமயிர்கள்
குறிய - (முடிகூடாமல்) குட்டையுள்ளன;
கலையோ - அடையோ வென்னில்

விளக்க உரை

உரை:1

தலைமகளின் இளமையை நோக்கிச் செவிலித்தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. நாயகனோடு களவொழுக்கத்திற் புணர்ந்த நாயகி அவன் பிரிந்த நிலையில் ஆற்றாது வருந்தி வாய் பிதற்றிக் கண்ணீர் சொரிந்து உடலிளைத்து வடிவம் வேறுபட, அவ்வேறுபாடு மாத்திரத்தைக் கண்ட தாய் இதற்கு காணமென்னோ வென்று கவலைப்பட்டு அவளது உயிர்த்தோழியைக் கேட்க, அவள் ஒளிக்காமல் உண்மையான காரணத்தைக் கூறியிட, அது கேட்ட தாய், இவளது இளமையைக் கருதி இரங்கிக் கூறிய துறை இது. உண்மையில் நாயகி யௌவன பருத்தை அடைந்திருந்தும் இவள் தாய்மார்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க. “செய்யநூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லளல்லள்” “வாயிற்பல்லு மெழுந்திட மயிரும் முடி கூடிற்றில... மாயன் மாமணி வண்ணன் மேலிவள் மாலுறுகின்றானே” “கொங்கையின்னங் குவிந்தெழுந்தில” என்று பெரியாழ்வார் பாசுரங்களும் “முள்ளெயிறேய்ந்தில கூழை முடி கொடா,தெள்ளியளென்பதோர் தேசிலன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.

உரை:2

தலைமகள் இளமைக்கு செவிலி இரங்குவதாக உள்ள இந்தப் பாட்டில் இந்தப் பெண்ணுக்கு மார்பே இன்னும் பெரிசாகவில்லை, தலைமயிர் வளரவில்லை. ஆடைகள் இடுப்பில் நில்லாமல் நழுவுகின்றன, பேச்சு சரியில்லை. கண்கள் உலகை விலை பேசும் அளவுக்கு மிளிர்கின்றன. பெருமாள் இருப்பது திருவேங்கடம் என்று மட்டும் கூறுகிறாள் இந்தப் பேதைப் பெண் என்று ஒரு தாய் இன்னும் பருவம் எய்தாத தன் மகள் திருமாலையே எண்ணுவதை நினைத்து மனம் வருந்துவதாக நேரடி அர்த்தம் கொண்ட இந்தப் பாட்டிற்கு ஸ்வாபதேச அர்த்தம் இப்படிச் சொல்வார்கள்.

English Translation

Her breasts have not grown to the full, her soft hair does not gather into a tuft, her DRESS does not stay on her person, her tongue speaks in bladder. Yet her lips shine with a brightness that not the Earth or ocean can buy. She is always recliting the words, "The lod's hill is Tiruvenkatam"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்