- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமான் தன்னை ஆச்ரயிப்பவர்களின் இடையூறுகளைத் தொலைத்து அவரவர் மேன்மேலும் விரும்புகின்ற இஷ்டங்களையுந் தந்தருள்வனென்கிறது. பின்னடிகளில் கபித்தாஸுர வத்ஸாஸுரர்களைக் கொன்றழித்ததையும் மாவலியின் கொழுப்பையடக்கியதையும் பேசினதன் கருத்தாவது - துரஹங்சாரியான மாவலியின் கையில் அகப்பட்டக் கிடந்த பூமியைத் தன் திருவடிகளிலே கொண்டு வாழ்வித்தவன், வணங்கினவர்களின் விரோதிகள் கபித்தாஸுரனும் வத்ஸாஸரனும் பட்டபாடுபாடும்படி போக்கிக் கர்ப்பனென்பதாம். வேற்றுருவாய் -திருமகள் கொழுநனாயிருக்கும் உருவத்தை விட்டு யாசக ப்ரஹ்மசாரியின் உருவத்தை யேறிட்டுக்கொண்டு என்றபடி. அன்றி, இரக்கும் போது சிறியகாலைக்காட்டி, அளக்கும்போது பெரியகாலைக் கொண்டு என்றுமாம்.
English Translation
Bowing low with proper respect the lord came in disguise and took the Earth under his feet. He destroyed the wood-apple free throwing a calf against it. He gives life to his devotees.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்