விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செந்நெல்லார் வயல் சூழ்*  திருக்கோட்டியூர்* 
    மன்னு நாரணன்*  நம்பி பிறந்தமை*
    மின்னு நூல்*  விட்டுசித்தன் விரித்த*  இப் 
    பன்னு பாடல் வல்லார்க்கு*  இல்லை பாவமே (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் நெல் - செந்நெல் தாந்யங்களால்;
ஆர் - நிறையப் பெற்ற;
வயல் - கழனிகளாலே;
சூழ் - சூழப்பட்ட;
திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரிலே

விளக்க உரை

உரை:1

செந்நெல் ஆர்க்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் நிலைத்து வாழும் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பிய நாரணன் திருவாய்ப்பாடியில் பிறந்த சரிதத்தை திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடுபவர்களுக்கு இறைவனைச் சிந்திக்கவும் அடையவும் தடையாக நிற்கும் பாவங்கள் நீங்கும். 

உரை:2

நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீமந்நாராயணன் திருவாய்ப்பாடியில் வந்து திருவவதரித்தபடியைப் பட்டர்பிரான் பேசினதும் பக்தர்களுக்கு போக்யமுமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள் எம்பெருமானை அநுபவிப்பதற்கு இடையூறான பாவங்களில் நின்றும் நீங்கி வாழ்வர் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று. நம்பி பிறந்தமை என்றது - திருவாய்ப்பாடியில் நடந்த கொண்டாட்டங்களுக்கும் உபலக்ஷணம்.

English Translation

These sweet songs of Vishnuchitta who wears the bright Vedic thread speak of the birth of the eternal Lord Narayana in famed Tirukkottiyur, surrounded by fertile paddy fields. Those who master it will gather no sin.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்