விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடை நின்றூ அமரர் கழல்தொழுது, நாளும்-
    இடைநின்ற இன்பத்தராவர்,*  புடைநின்ற-
    நீரோத மேனி*  நெடுமாலே,*  நின்னடியை-
    ஆரோத வல்லார் அவர்?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இடைநின்ற இன்பத்தர் ஆவர் - நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே - (இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை - உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர் - அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

விளக்க உரை

பெரும்பாலும் இவ்வுலகத்தவர்கள் தேவதாந்தர பஜனஞ்செய்து சுவையற்ற அற்ப பலன்களைப் பெற்று அநர்த்தப்படுகின்றனரேயன்றி உன்னையுணர்ந்து ஆச்ரயித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசுகிறார். கடைநின்றமரர் கழல்தொழுது = அமரர் கடைநின்று கழல் தொழுது என்க. கடையாவது மனைவாசல்; தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது - அவர்களை ஆராதித்தமை கூறியவாறு. இனி, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு, “கடைநின்ற + அமரர்” என்று பிரித்து, ‘தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து’ என்பதாகவும் பொருள்கொள்ளலாம். இடைநின்ற வின்பத்தராவர் - எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கிடைக்கக் கூடிய பரமபதாநுபவமொன்றே உத்தமமாகையாலும், அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களெல்லாம் இடைக்கட்டாதலாலும்; தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப்பட்ட ஹூத்ரபலன்களே கிடைக்குமாதலாலும் “இடைநின்ற இன்பத்தராவர்” என்னப்பட்டது. இன்பமென்றதும் ப்ரமித்தவர்களின் கருத்தாலேயாம். ‘ஆவர்’ என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க.

English Translation

Filled with love, I stand with flowers and proper chants. O Protector! As a child you destroyed a cart, Asking for land you protected the earthlings Pray correct my ways.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்