விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்பே தகளியா*  ஆர்வமே நெய் ஆக,* 
    இன்பு உருகு சிந்தை இடு திரியா,*  நன்பு உருகி* 
    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்*  நாரணற்கு* 
    ஞானத் தமிழ் புரிந்த நான். (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ - (பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக - ஆத்மாவும் உருகப்பெற்று
நாரணற்கு - ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன் - பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

விளக்க உரை

உரை:1

தகளியாவது - நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல், (தாளி என்று உலக வழக்கு.) அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார். அன்பு ஆர்வம் இன்பு என்றவையெல்லாம் பகவத் விஷயத்தில் தமக்குண்டான அநுராக விசேஷங்களேயாம். அநுராகத்தில் கணுக்கணுவான அவஸ்தாபேதங்கள் உண்டாகையால் அவற்றைத் திருவுள்ளம் பற்றி அன்பு என்றும் ஆர்வம் என்றும் இன்பு என்றும் சப்தபேதங்களையிட்டுச் சொன்னபடி. ஆகவே, எம்பெருமானது திருவருளால் தமக்கு அப்பெருமான் விஷயமாகத் தோன்றியுள்ள ப்ரீதியின் நிலைமைகளைத் தகளியும் நெய்யும் திரியுமாக உருவகப்படுத்தி, ஸர்வசேஷியான நாராயணனுக்குப் பரஜ்ஞானமாகிற சுடர் விளக்கையேற்றி அடிமைசெய்யப் பெற்றேனென்று மகிழ்ந்து கூறினாராயிற்று. எம் பெருமானிடத்தில் எனக்கு அனுராகமானது கணுக்கணுவாக ஏறி வளர்த்துச் செல்லப் பெற்றதனால் அவ்வநுராகம் உள்ளடங்காமல் இத்தமிழ்ப் பாசுரங்களை வெளியிடத் தொடங்குகின்றேனென்பது பரமதாற்பரியம்.

உரை:2

"அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை விளக்குத் திரியாக்கி ஒளிவிடுகின்ற ஞானச்சுடரை, ஞானத்தமிழ் கொண்டு ஏற்றுகின்றேன் எனத் தம் சொல் மாலையைத் தொடங்கியவர் பூதத்தாழ்வார்.ஐம்புலன்கள் ஆகி நின்றவனும், ஐம்பெரும் பூதங்களாகி உலகத்து உயிர்களை வாழ வைப்பவனும் உலகளந்த பிரான் எனத் தம்முள் பெருமாளைக் காணும் ஆழ்வார், தம் மனம் திருமாலைத் தேடி ஓடுகின்றது என்று தம் நிலையை வெளிப்படுத்துகின்றார்."

English Translation

Love is my lamp, eagerness is the oil, my heart is the wick. Melting myself, here I light a lamp and offer this Tamil garland of knowledge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்