விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புகழ்வாய் பழிப்பாய்*  நீ பூந்துழாயானை,* 
    இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே,* - திகழ்நீர்க்-
    கடலும் மலையும்*  இருவிசும்பும் காற்றும்,* 
    உடலும் உயிரும் ஏற்றான்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கருதுவாய் - ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும் - விளங்குகின்ற ஜலபூர்த்தியையுடைய ஸமுத்ரமும்,
மலையும் -  பர்வதங்களும்
இரு விசும்பும - பரம்பிய ஆகாசமும்
காற்றும் - வாயுவும்

விளக்க உரை

“சஞ்சலம் ஹி மந:கிருஷ்ண!” என்றும் 2. “நின்றவா ரில்லாநெஞ்சு” என்றுஞ்சொல்லுகிறபடியே நெஞ்சின் நிலைமை மாறிமாறி கொண்டேயிருக்குமென்பதை நினைத்த ஆழ்வார், ‘நெஞ்சே! நீ எப்போதும் ஒரே நிலையாயிருந்து எம்பெருமானைப் புகழ்வதும் ஆதரிப்பதுமாயிருந்தாலும் சரி; நிலைமாறிச் சிசுபாலாதிகளைப்போலே அவனைப் பழிப்பதும் அநாதரிப்பதுமாயிருந்தாலும் சரி; நீ எது செய்தாலும் அவனுடைய பெருமேன்மைக்குக் குறைவு நிறைவுகள் வாராதுகாண்’ என்று தம்முடைய உறுதியைத் தெரிவிக்கிறார் பின்னடிகளில், எம்பெருமான் கார்ய காரண ரூபங்களான ஸகல பதார்த்தங்களையும் தரித்துக்கொண்டிருப்பவன் என்று அவனுடைய ஸர்வதாரகத்வத்தை சொன்னதானது நம்முடைய புகழ்வு மிகழ்வுமெல்லாம் அவனுக்கு அப்ரயோஜகம் என்கைக்காகவென்க. ஏற்றான் – எல்லாம் தானென்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி எல்லாவற்றையும் தனக்கு விசேஷணமாகக் கொண்டுள்ளான் என்றுரைப்பதுமுண்டு.

English Translation

Praise him or blame him, -O Heart of mine!, -honour him or dishonour him, the Lord accepts all; for does he not contain the mighty ocean, the mountains, plains, winds, bodies and lives, all within himself? He wears a cool Tulasi garland.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்