விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரும்புஅனன்றுஉண்ட நீரும்*  போதரும் கொள்க,*  என்தன்- 
    அரும்பிணி பாவம் எல்லாம்*  அகன்றன என்னை விட்டு,*
    சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
    கரும்பினைக் கண்டு கொண்டு* என்  கண்இணை களிக்குமாறே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரும்பு - இரும்பானது
அனன்று - பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட - உட்கொண்ட
நீரும் - ஜலமும்
போதரும் - வெளியிலே வந்துவிடும்;

விளக்க உரை

தம்மைவிட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்றுபோன ஆச்சரியத்தினால் இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார். இரும்பானது பழுக்கக் காயந்து நீரைக்குடித்தால் குடித்த நீரடங்கலும் இரும்பிலே சுவறிப்போமத் தனை யொழிய அந்த இரும்பில் நின்றும் வெளிப்படுத்தியெடுக்க முடியாதென்பது லோகாது பவஸித்தமே யாகிலும், அந்த நீரும் அந்த இரும்பில் நின்று வெளிப்பட்டுவிடுமென்று நிச்சயிக்கலாம்; ஏனென்றால், அனன்ற இரும்புபோன்ற என்னிடத்திலே தனித்துப் பிரித்துக் களைந்தொழிக்க வொண்ணாதபடி மங்கிக்கிடந்த அரும்பிணி பாவங்கள் வெளிப்பட்டனவன்றோ; ஆதலால் இதுபோல் அதுவும் நேரலாம் என்கிறாராயிற்று. அரும்பிணி பாவமெல்லாம் அகலவே, திருவரங்கம் பெரிய கோயிலிலே நித்யஸந்நிதி பண்ணியிருக்கின்ற பரமபோக்யனான பெருமானைக் கண்ணாரக்கண்டு களிக்கப்பெற்றே னென்கிறார் பின்னடிகளில். தகாத விஷயங்களைக் கண்டுகளித்த என்கண்கள் இன்று ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைக் கண்டு களிக்கப்பெற்றமை என்ன பாக்கியம்! என்று அதிசயப்படுகிறார்.

English Translation

Even water slurped by a red hot iron is of use, take it from me. All my terrible karmas have left me. My eyes hover around the sweet-as-a-sugarcane-Lord of Arangam, -who has his temple amid bee-humming groves, -enjoying his form forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்