விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பத்து நாளும் கடந்த*  இரண்டாம் நாள்* 
    எத் திசையும்*  சயமரம் கோடித்து*
    மத்த மா மலை*  தாங்கிய மைந்தனை*
    உத்தானம் செய்து*  உகந்தனர் ஆயரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பத்து நளும் கடந்த - பத்துநாளுங் கழிந்த;
இரண்டாம் நாள் - பன்னிரண்டாநாளான நாமகரண திநத்திலே;
எத்திசையும் - எல்லாத்திக்குக்களிலும் ;
சயம் மரம் - ஜயதோரணஸ்தம்பங்களை ;
கோடித்து - நாட்டி அலங்கரித்து

விளக்க உரை

 உரை:1

கண்ணன் பிறந்து பன்னிரண்டாம் நாள் அந்தக் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்தத் திருவிழாவிற்காக எல்லா திசைகளிலும் கொடிகளும் தோரணங்களும் தாங்கிய வெற்றித் தூண்கள் நடப்பட்டிருக்கின்றன. அந்தத் திருவிழாவில் யானைகள் நிறைந்த கோவர்ந்தன மலையைத் தாங்கிய மைந்தனாம் கோபாலனை கைத்தலங்களில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர் ஆயர்கள். 

 உரை:2

எங்கும் வெற்றித் தோரணங்களை நாட்டி அலங்கரித்து ஸ்ரீக்ருஷ்ணனென்று திருநாமமிட்டு அக்குழந்தையைத் தங்கள் தங்கள் கையிலேயெடுத்துக்கொண்டு ஆநந்தம் பொங்கி நின்றார்கள். பிறந்த பத்தாம் நாளிலாவது பன்னிரண்டாம் நாளிலாவது வேறு நல்ல நாளிலாவது நாமகரணம் செய்யும்படி மநுஸ்மிருதி கூறுகின்றது. இடையர்களெல்லாரும் வழக்கப்படி தேவேந்திரனை ஆராதிக்கத் தொடங்கினபோது கண்ணபிரான் அதனைத் தடுத்துக் கோவர்த்தன மலைக்கே அந்த ஆராதனங்களை நடத்தி வைக்க, இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடாமழைபெய்வித்துப் பசுக்களையும் இடையர்களையும் துன்பப்படுத்தினபோது அந்த கோவர்த்தன மலையையே யெடுத்துக் குடையாகப் பிடித்துக் கண்ணன் காத்தருளின செய்தி ப்ரஸித்தம். இப்படி கண்ணபிரான் மலையைக் குடையாகப்பிடித்தது நாமகரணஞ்செய்த பின்பு நிகழ்ந்ததாயினும், இவ்வாழ்வார் பிற்காலத்தவராகையாலே இப்போது அதனை அநுஸந்திருக்கக் குறையில்லை. மைந்தன் - ‘மைந்து’ என்று இளமைக்கும் வலிமைக்கும் அழகுக்கும் பெயர்; அதனையுடையவன் மைந்தன். உத்தானம் - வடச்சொல்.

English Translation

After ten days and two the cowherds erected festooned pillars on all four sides then lifted the child from the cradle, singing, “The-prince-who-lifted-the-wild elephants-mountain-against-a-hailstorm!”

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்