விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு*  வார்காது தாழப் பெருக்கிக்* 
    குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்*  கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*
    இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்*  இனிய பலாப்பழம் தந்து* 
    சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

 
இ கோபாலர் பிள்ளைகள் - இந்த இடைப்பிள்ளைகள்;
வார் காது - (தமது) நீண்ட காதை;
தாழ பெருக்கி - (தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி;
வணம் நின்று உடைய - நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய;
வயிரம் கடிப்பு - வயிரக்கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை;
இட்டு - அணிந்து கொண்டு;

விளக்க உரை

கண்ணனைப் புகழ்ந்து அழைத்தும் அவன் வாராமையாலே மற்றையிடைப்பிள்ளைகள் காதுபெருக்கிக் காதணிகளை யணிந்திருப்பதைக் காட்டி அப்பிள்ளைகளைக் கொண்டாடிச் சொல்லி ‘இவர்களைப் போல நீயும் தாய் சொல் கேட்டுக் காது பெருக்கிக்கொள்ளவேண்டாவோ? அப்படிக் காது பெருக்கிக் கடிப்பை யணிந்தால் நானுனக்கு நல்ல பலாப்பழம் தருவதோடு முலையையும் உண்ணத் தருவேன்; அப்பா! உன்னைக் கும்பிடுகிறேன் நீ இங்கே வர வேணும்’ என்று கெஞ்சியழைக்கிறாள். வணம் - ‘வண்ணம்’ என்பதின் தொகுத்தல். வயிரக்கடிப்பு - வஜ்ரகுண்டலம். கோபாலர் + பிள்ளைகள் = கோபாலபிள்ளைகள்; “சில விகாரமா முயர்திணை”. சுணம் - “சுணங்கு” என்பதன் விகாரமென்பர்; முலைமேல் தோன்றும் நிறவேறுபாடு; பசலைநிறம். சோத்தம் - ஸ்தோத்ரம் என்ற வடசொற் சிதைவு என்னலாம்; இதற்கு - “அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சிதோற்றச்சொல்லுவதற்கு சப்தவிசேஷம்” என்பது பெரியஜீயருரை.

English Translation

O Govinda! See, these cowherd-boys with long-drawn ears are wearing beautiful diamond earrings. They are well-mannered children. Listen to me. If you wear these beautiful ear-pendants, I shall give

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்