விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எந்தை தந்தை தம்மான் என்று என்று*  எமர் ஏழ் அளவும்* 
    வந்து நின்ற தொண்டரோர்க்கே*  வாசி வல்லீரால்*
    சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்*  சிறிதும் திருமேனி* 
    இந்த வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எந்தை தந்தை தம்மான் என்று என்று - என் தகப்பனார் அவர் தகப்பனார் அவர் தகப்பனார் என்கிற முறைமையில்
எமர் ஏழ் அளவும் - எமது முன்னோர்கள் எழுதலை முறையாக
வந்து நின்ற - தேவரீருடைய கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கின்ற
தொண்டரோர்க்கே - அடியோங்கள் விஷயத்திலேயே
வாசி வல்லீர் - கணக்குப் பார்க்கின்றீர்;

விளக்க உரை

English Translation

O Lord of indalur! My father, and his fathers before him, for seven generations, have been faithfully serving you as our only master. Alas, you do not inquire of us; you neither stay in our thoughts, nor let us see your body's hue even slightly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்