விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்* 
    கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*
    எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்* 
    கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்ணம் - அழகு பொருந்திய;
மாடங்கள் - மாடங்களாலே;
சூழ் - சூழப்பட்ட ;
திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள);
கேசவன் - கேசவனென்ற திருநாமமுடையனாய்;
 

விளக்க உரை

உரை:1
 
அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் வாழும் கண்ணன் கேசவன் நம்பி திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்த போது, அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால் ஆயர்கள் ஒருவர் மீது பூசிய நறுமண எண்ணெயாலும் ஒருவர் மீது ஒருவர் தூவிய வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளாலும் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது. 
 
உரை:2

(ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான்) இதியாதி பிரமாணங்களாலே க்ஷீராப்தியிலிருந்து எம்பெருமான் கண்ணனாக அவதரித்தமை விளங்காநிற்க, இங்கே திருக்கோட்டியூரில் நின்றும் அவதரித்ததாகச் சொல்லுகிறது என்னவெனில், முன்பு இரணியன் மூவுலகங்களையும் அரசாண்டபோது தேவதைகள் அவ்வசுரனை முடிப்பதற்கு வேண்டிய உபாயத்தை ஆலோசிப்பதற்குத் தகுதியானதும் அசுரர்களின் உபத்ரவமற்றதுமான இடத்தைத் தேடுமளவில், கதம்பமுனியின் சாபத்தினால் துஷ்டரொருவரும் கிட்டவர முடியாமலிருந்த இந்த (திருக்கோட்டியூர்) க்ஷேத்திரம் க்ஷீராப்தி போலவே ஆலோசிப்பதற்கு ஏகாந்தஸ்தாகமாய் இருந்தபடியாலும், தேவதைகளின் கூட்டத்தில் எழுந்தருளி அவர்களை ரக்ஷிக்க வேண்டிய ரீதியைச் சிந்திக்கின்ற க்ஷீராப்தி நாதன் போலவே இந்த க்ஷேத்திரத்து எம்பெருமானும் சேஷசாயியாய் இருப்பதனாலும், தமக்கு மங்களாசாசநத்துக்குக் கூட்டுறவான செல்வநம்பியைப் பற்றிச் சொல்லும்போது ஸ்மரிக்கநேர்ந்த இந்த திவ்ய தேசத்தினிடத்தில் தமக்குள்ள அன்புமிகுதியினாலும் இப்படி ஐக்கியமாக அருளிச்செய்தாரென்று கொள்க. தேவர்கள் கூட்டமாயிருந்து ஆலோசித்தஸ்தலமென்கிற காரணம் பற்றியே இதற்கு கோஷ்டீபுரம் என்று திருநாமமாயிற்று. அதுவே தமிழில் கோட்டியூர் என்றாயிற்று.

English Translation

When the Lord Sri Krishna Kesava was born in Tirukkottiyur of beautiful mansions they spilled oil and turmeric powder on one another, slushing the portico of Krishna’s house.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்