விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து*   இலங்கை
    வவ்விய இடும்பை தீரக்*  கடுங் கணை துரந்த எந்தை* 
    கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்*  குங்குமம் கழுவிப் போந்த* 
    தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கவ்வை - ஆரவாரம்செய்பவளாய்
வாள் எயிறு - வாள்போன்ற கூர்மையான பற்களையுடையளாய்
வல் பேய் - கல்நெஞ்சளான பூதனையினுடைய
கதிர் முலை - (விஷத்தாலே) புகர் பெற்றிருக்கிற முலையை
சுவைத்து - உறிஞ்சி உண்டவனாயும்

விளக்க உரை

முன்னடிகளில் “இலங்கை மன்னிய விடும்பை தீர” “இலங்கை மன்னிய விடும்பைகூர” என்பன பாடபேதங்கள். “வவ்விய விடும்பை தீர” என்னும் பாடம் பெரும்பான்மையாக வழங்கிவரக் காண்கிறோம். வியாக்கியானத்திலும் உள்ளது.

English Translation

The Lord who drank the poison from the breast of Putana, and who rained heavy arrows to rid the world of Lanka's misery, resides at Nangur in Tirumanik-kudam where the sacred river kaveri flows washing the kumkuma off the breasts of coral-lipped dames.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்