விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ* 
    அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*
    பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்* 
    சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயிரம் தோள் எழுந்தாட - (அவனைச் சித்திரவதம் பண்ண வேணுமென்கிற பதற்றத்தாலே ) கைகள்  பலமுகமாகப் பெருக்கமடைய.
எரிகான்ற இரண்டு பைங்கண் - நெருப்பை உமிழ்கின்ற பசுத்த இரண்டு திருக்கண்களையும்
நீண்ட எயிற்றொடு பேழ்வாய் சிங்கம் உருவில் வருவான் - நீண்ட கோரப் பற்களையும்  பெரிய வாயையுமுடைய நரஸிம்ஹ ரூபியாய்க் காட்சி தந்த பெருமான் வருவான்

விளக்க உரை

பொன்பேயரோன் - வடமொழியில் ” ஹிரண்யம் ” என்பதற்குப் ” பொன் ” என்று பொருளாதலால் ஹிரண்யனென்னும் பெயருடைய அசுரனைப் பொன் பெயரோனென்கிறது. ஆகவே இது லக்ஷித லக்ஷணைஃ ஆயிரந்தோளெழுந்தாட - பரமபாகவத விரோதியான இரணியனைப் புடைப்பதிலே திருக்கைகளுக்குண்டான பதற்றத்தைப் பலமுகமாக்கி வருணித்த படி. கான்ற என்னும் பெயரெச்சத்தில் கால் என்பது வினைப்பகுதி.

English Translation

Once he took on the terrible Hiranya and showed his anger on him. He sported a thousand arms, his eyes blazed like fire, his gaping mouth displayed sharp feline teeth, and he tore the Asura’s chest. He resides in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்