பிரபந்த தனியன்கள்

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.

   பாசுரங்கள்


    சீர் அரசு ஆண்டு*  தன் செங்கோல் சில நாள்*  செலீஇக் கழிந்த,- 
    பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு,*  பார் அளந்த- 

    பேர் அரசே! எம் விசும்பு அரசே! எம்மை நீத்து வஞ்சித்த* 
    ஓர் அரசே! அருளாய்,*  இருளாய் வந்து உறுகின்றதே.


    உறுகின்ற கன்மங்கள்*  மேலன ஓர்ப்பிலராய்,*  இவளைப்-
    பெறுகின்ற தாயர்*  மெய்ந் நொந்து பெறார்கொல்*  துழாய் குழல்வாய்த்-

    துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும்*  சூழ்கின்றிலர்* 
    இறுகின்றதால் இவள் ஆகம்,*  மெல் ஆவி எரி கொள்ளவே.


    எரி கொள் செந் நாயிறு*  இரண்டு உடனே உதய மலைவாய்,* 
    விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள்,*  மீண்டு அவற்றுள்-

    எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்*
    விரிவ சொல்லீர் இதுவோ,*  வையம் முற்றும் விளரியதே? 


    விளரிக் குரல் அன்றில்*  மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை,*
    முளரிக் குரம்பை இதுஇதுவாக,*  முகில் வண்ணன் பேர்-

    கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்* 
    தளரின் கொலோ அறியேன்,*  உய்யல் ஆவது இத் தையலுக்கே!


    தையல் நல்லார்கள் குழாங்கள்*  குழிய குழுவினுள்ளும்,* 
    ஐய நல்லார்கள் குழிய விழவினும்,*  அங்கு அங்கு எல்லாம்-

    கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்* 
    மைய வண்ணா! மணியே,*  முத்தமே! என் தன் மாணிக்கமே! 


    மாணிக்கம் கொண்டு*  குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி,* 
    ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை,*  உலகு அளந்த-

    மாணிக்கமே! என் மரகதமே! மற்று ஒப்பாரை இல்லா*
    ஆணிப்பொன்னே,*  அடியேன் அடி ஆவி அடைக்கலமே!


    அடைக் கலத்து ஓங்கு*  கமலத்து அலர் அயன் சென்னி என்னும்,*
    முடைக் கலத்து ஊண்*  முன் அரனுக்கு நீக்கியை,*  ஆழி சங்கம்-

    படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்*
    புடைக்கலந்தானை, எம்மானை*  என் சொல்லிப் புலம்புவனே? 


    புலம்பும் கன குரல்*  போழ் வாய அன்றிலும், பூங் கழி பாய்ந்து*
    அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும்,*  ஆங்கு அவை நின்-

    வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக*  வையம்-
    சிலம்பும்படி செய்வதே,*  திருமால் இத் திருவினையே?


    திருமால் உரு ஒக்கும் மேரு,*  அம் மேருவில் செஞ்சுடரோன்*
    திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும்,*  அன்ன கண்டும்- 

    திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்*
    திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,*  எங்கே வரும் தீவினையே?


    தீவினைக்கு ஆரு நஞ்சை*  நல் வினைக்கு இன் அமுதத்தினை,* 
    பூவினை மேவிய தேவி மணாளனைm,*  புன்மை எள்காது-

    ஆவினை மேய்க்கும் வல் ஆயனை*  அன்று உலகு ஈர் அடியால்-
    தாவின ஏற்றை எம்மானை*  எஞ்ஞான்று தலைப்பெய்வனே?


    தலைப்பெய்து யான் உன்*  திருவடி சூடும் தகைமையினால் ,*
    நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும்,*  மாயம் செவ்வே-

    நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்*
    தொலைப் பெய்த நேமி எந்தாய்,*  தொல்லை ஊழி சுருங்கலதே. 


    சுருங்கு உறி வெண்ணெய்*  தொடு உண்ட கள்வனை,*  வையம் முற்றும்
    ஒருங்குற உண்ட*  பெரு வயிற்றாளனை,*  மாவலிமாட்டு-

    இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற*
    பெருங் கிறியானை அல்லால்,*  அடியேன் நெஞ்சம் பேணலதே.


    பேண் நலம் இல்லா அரக்கர்*  முந்நீர பெரும் பதிவாய்,*
    நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று,*  நின்னை விண்ணோர்- 

    தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று*
    காணலும் ஆம்கொல் என்றே,*  வைகல் மாலையும் காலையுமே.


    காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த*  கங்குல் குறும்பர்*
    மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்,*  அன்ன கண்டும்- 
     

    காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து* 
    மாலை நல் நாவில் கொள்ளார்,*  நினையார் அவன் மைப் படியே.


    மைப் படி மேனியும்*  செந்தாமரைக் கண்ணும் வைதிகரே,*
    மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்,* 

    எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும்*
    அப்படி யானும் சொன்னேன்*  அடியேன் மற்று யாது என்பனே.? 


    யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,*  அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்* 
    மூது ஆவியில் தடுமாறும்*  உயிர் முன்னமே,*  அதனால்- 

    யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
    மாதாவினை பிதுவை,*  திருமாலை வணங்குவனே. (2)


    வணங்கும் துறைகள்*  பல பல ஆக்கி,*  மதி விகற்பால்-
    பிணங்கும் சமயம் பல பல ஆக்கி,*  அவை அவைதோறு-

    அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்* 
    இணங்கும் நின்னோரை இல்லாய்,*  நின்கண் வேட்கை எழுவிப்பனே


    எழுவதும் மீண்டே*  படுவதும் பட்டு,*  எனை ஊழிகள் போய்க்-
    கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால்,*  இமையோர்கள் குழாம்-

    தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு* 
    கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்,*  உண்டோ கண்கள் துஞ்சுதலே? 


    துஞ்சா முனிவரும்*  அல்லாதவரும் தொடர நின்ற,*
    எஞ்சாப் பிறவி இடர் கடிவான்,*  இமையோர் தமக்கும்- 

    தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே*
    நெஞ்சால் நினைப்பு அரிதால்,*  வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே.


    ஈனச் சொல் ஆயினும் ஆக,*  எறி திரை வையம் முற்றும்*
    ஏனத்து உருவாய் இடந்த பிரான்,*  இருங் கற்பகம் சேர்-

    வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*
    ஞானப் பிரானை அல்லால் இல்லை*  நான் கண்ட நல்லதுவே (2) 


    நல்லார் நவில் குருகூர் நகரான்,*  திருமால் திருப் பேர்-
    வல்லார்*  அடிக் கண்ணி சூடிய*  மாறன் விண்ணப்பம் செய்த-

    சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
    பொல்லா அருவினை*  மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)