பிரபந்த தனியன்கள்
கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.
பாசுரங்கள்
நல்லார் நவில் குருகூர் நகரான்,* திருமால் திருப் பேர்-
வல்லார்* அடிக் கண்ணி சூடிய* மாறன் விண்ணப்பம் செய்த-
சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
பொல்லா அருவினை* மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)