பிரபந்த தனியன்கள்

கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து

   பாசுரங்கள்


    சொல்லும் தனையும்*  தொழுமின் விழும்உடம்பு,*
    செல்லும் தனையும் திருமாலை,* - நல்இதழ்த்-

    தாமத்தால் வேள்வியால்*  தந்திரத்தால் மந்திரத்தால்,* 
    நாமத்தால் ஏத்துதிரேல் நன்று.      


    நன்று பிணிமூப்புக்*  கையகற்றி நான்குஊழி,*
    நின்று நிலம்முழுதும் ஆண்டாலும்,*  என்றும்-

    விடல்ஆழி நெஞ்சமே!*  வேண்டினேன் கண்டாய்,* 
    அடல்ஆழி கொண்டான் மாட்டுஅன்பு.


    அன்புஆழியானை*  அணுகுஎன்னும், நா அவன்தன்*
    பண்புஆழித் தோள்பரவி ஏத்துஎன்னும்,*  முன்புஊழி-

    காணானைக்*  காண்என்னும் கண்செவி கேள்என்னும்* 
    பூண்ஆரம் பூண்டான் புகழ்.  


    புகழ்வாய் பழிப்பாய்*  நீ பூந்துழாயானை,* 
    இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே,* - திகழ்நீர்க்-

    கடலும் மலையும்*  இருவிசும்பும் காற்றும்,* 
    உடலும் உயிரும் ஏற்றான்.


    ஏற்றான் புள்ஊர்ந்தான்*  எயில்எரித்தான் மார்வுஇடந்தான்* 
    நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்,* - கூற்றுஒருபால்-

    மங்கையான்*  பூமகளான் வார்சடையான்,*  நீள்முடியான்- 
    கங்கையான்*  நீள்கழலான் காப்பு. 


    காப்பு உன்னைஉன்னக்*  கழியும் அருவினைகள்,* 
    ஆப்பு உன்னைஉன்ன அவிழ்ந்தொழியும்* - மூப்புஉன்னைச்-

    சிந்திப்பார்க்கு*  இல்லை திருமாலே,*  நின்அடியை-
    வந்திப்பார்*  காண்பர் வழி. 


    வழிநின்று*  நின்னைத் தொழுவார்,*  வழுவா-
    மொழிநின்ற மூர்த்தியரே ஆவர்,* - பழுதுஒன்றும்-

    வாராத வண்ணமே*  விண்கொடுக்கும்,*  மண்அளந்த-
    சீரான் திருவேங்கடம். 


    வேங்கடமும்*  விண்ணகரும் வெஃகாவும்,*  அஃகாத-
    பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்நகரும்,* - நான்குஇடத்தும்-

    நின்றான் இருந்தான்*  கிடந்தான் நடந்தானே,* 
    என்றால் கெடுமாம் இடர்   


    இடர் ஆர் படுவார்?*  எழுநெஞ்சே,*  வேழம்-
    தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த,* - படம்உடைய-

    பைந்நாகப் பள்ளியான்*  பாதமே கைதொழுதும்,* 
    கொய்ந்நாகப் பூம்போது கொண்டு        


    கொண்டானை அல்லால்*  கொடுத்தாரை யார்பழிப்பார்,*
    'மண்தா' எனஇரந்து மாவலியை,*  ஒண்தாரை-

    நீர்அங்கை தோய*  நிமிர்ந்திலையே,*  நீள்விசும்பில்-
    ஆரம்கை தோய அடுத்து? 


    அடுத்த கடும்பகைஞற்கு*  ஆற்றேன் என்றுஓடி,* 
    படுத்த பெரும்பாழி சூழ்ந்த - விடத்துஅரவை,*

    வல்லாளன் கைக்கொடுத்த*  மாமேனி மாயவனுக்கு,*
    அல்லாதும் ஆவரோ ஆள்?      


    ஆள்அமர் வென்றி*  அடுகளத்துள் அந்நான்று,* 
    வாள்அமர் வேண்டி வரைநட்டு,* - நீள்அரவைச்-

    சுற்றிக் கடைந்தான்*  பெயர்அன்றே,*  தொல் நரகைப்-
    பற்றிக் கடத்தும் படை?


    படைஆரும் வாள்கண்ணார்*  பாரசிநாள்,*  பைம்பூந்-
    தொடையலோடு ஏந்திய தூபம்,* - இடைஇடையில்-

    மீன்மாய*  மாசூணும் வேங்கடமே,*  மேல்ஒருநாள்- 
    மான்மாய*  எய்தான் வரை    


    வரைகுடைதோள் காம்புஆக*  ஆநிரைகாத்து,*  ஆயர்-
    நிரைவிடைஏழ்*  செற்றஆறு என்னே,* - உரவுஉடைய-

    நீர்ஆழி உள்கிடந்து*  நேர்ஆம் நிசாசரர்மேல்,*
    பேர்ஆழி கொண்ட பிரான்?   


    பிரான்! உன் பெருமை*  பிறர் ஆர்அறிவார்?,*
    உராஅய் உலகுஅளந்த நான்று,* - வராகத்து-

    எயிற்றுஅளவு*  போதாஆறு என்கொலோ,*  எந்தை-
    அடிக்குஅளவு போந்த படி?   


    படிகண்டு அறிதியே*  பாம்புஅணையினான்,*  புள்- 
    கொடி கண்டுஅறிதியே? கூறாய்,* - வடிவில்-

    பொறிஐந்தும் உள்அடக்கி*  போதொடு நீர்ஏந்தி,* 
    நெறிநின்ற நெஞ்சமே! நீ  


    நீயும் திருமகளும் நின்றாயால்,*  குன்றுஎடுத்துப்-
    பாயும்*  பனிமறுத்த பண்பாளா,* - வாசல்-

    கடைகழியா உள்புகா*  காமர்பூங் கோவல்*
    இடைகழியே பற்றி இனி.   


    இனியார் புகுவார்*  எழுநரக வாசல்?*
    முனியாது மூரித்தாள் கோமின்,* - கனிசாயக்-

    கன்றுஎறிந்த தோளான்*  கனைகழலே காண்பதற்கு,*
    நன்குஅறிந்த நாவலம்சூழ் நாடு.   


    நாடிலும்*  நின்அடியே நாடுவன்,*  நாள்தோறும்-
    பாடிலும்*  நின்புகழே பாடுவன்,*  சூடிலும்-

    பொன்ஆழி ஏந்தினான்*  பொன்அடியே சூடுவேற்கு,* 
    என்ஆகில் என்னே எனக்கு? 


    எனக்குஆவார்*  ஆர்ஒருவரே,*  எம்பெருமான்-
    தனக்குஆவான்*  தானே மற்றுஅல்லால்,* - புனக்காயாம்-

    பூமேனி காணப்*  பொதிஅவிழும் பூவைப்பூ,* 
    மாமேனி காட்டும் வரம்     


    வரத்தால் வலிநினைந்து*  மாதவ! நின் பாதம்,*
    சிரத்தால் வணங்கானாம் என்றே,* - உரத்தினால்-

    ஈர்அரியாய்*  நேர்வலியோன்ஆய இரணியனை,* 
    ஓர்அரியாய் நீஇடந்தது ஊன்?  


    ஊனக் குரம்பையின்*  உள்புக்கு இருள்நீக்கி,* 
    ஞானச் சுடர்கொளீஇ நாள்தோறும்,* - ஏனத்து-

    உருவாய் உலகுஇடந்த*  ஊழியான் பாதம்,*
    மருவாதார்க்கு உண்டாமோ வான்?      


    வான்ஆகி தீஆய்*  மறிகடல்ஆய் மாருதம்ஆய்* 
    தேன்ஆகி பால்ஆம் திருமாலே,* - ஆன்ஆய்ச்சி-

    வெண்ணெய் விழுங்க*  நிறையுமே,*  முன்ஒருநாள்-
    மண்ணை உமிழ்ந்த வயிறு?  


    வயிறுஅழல வாள்உருவி*  வந்தானை அஞ்ச* 
    எயிறுஇலக வாய்மடுத்தது என்நீ,* - பொறிஉகிரால்-

    பூவடிவை ஈடுஅழித்த*  பொன்ஆழிக் கையா நின்-
    சேவடிமேல் ஈடுஅழிய செற்று?  


    செற்றுஎழுந்து தீவிழித்து*  சென்ற இந்த ஏழுலகும்,* 
    மற்றுஇவை ஆஎன்று வாய்அங்காந்து,*  முற்றும்-

    மறையவற்குக் காட்டிய*  மாயவனை அல்லால்,* 
    இறையேனும் ஏத்தாதுஎன் நா.


    நாவாயில் உண்டே*  'நமோ நாரணா' என்று,*
    ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* - மூவாத-

    மாக்கதிக்கண் செல்லும்*  வகைஉண்டே,*  என்ஒருவர்-
    தீக்கதிக்கண் செல்லும் திறம்? 


    திறம்பாது என்நெஞ்சமே!*  செங்கண்மால் கண்டாய்,*
    அறம்பாவம் என்றுஇரண்டும் ஆவான்,*  புறம்தான்இம்-

    மண்தான்*  மறிகடல்தான் மாருதம்தான்,*  வான்தானே,-
    கண்டாய்*  கடைக்கண் பிடி.  


    பிடிசேர் களிறுஅளித்த பேராளா,*  உன்தன்-
    அடிசேர்ந்து அருள்பெற்றாள் அன்றே,* - பொடிசேர்-

    அனற்குஅங்கை ஏற்றான்*  அவிர்சடைமேல் பாய்ந்த,*
    புனல்கங்கை என்னும்பேர்ப் பொன்? 


    பொன்திகழும் மேனிப்*  புரிசடைஅம் புண்ணியனும்,* 
    நின்றுஉலகம் தாய நெடுமாலும்,* - என்றும்-

    இருவர்அங்கத்தால் திரிவரேலும்,*  ஒருவன்-
    ஒருவன் அங்கத்து என்றும் உளன்.  


    உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன் என்றும்-
    உளன்கண்டாய்,*  உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*

    வெள்ளத்தின் உள்ளானும்*  வேங்கடத்து மேயானும்,* 
    உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்  (2)


    ஓர்அடியும் சாடுஉதைத்த*  ஒண்மலர்ச் சேவடியும்,* 
    ஈர்அடியும் காணலாம் என்நெஞ்சே!* - ஓர்அடியில்-

    தாயவனை கேசவனை*  தண்துழாய் மாலைசேர்,*
    மாயவனையே மனத்து வை (2)