பிரபந்த தனியன்கள்

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
நன்னுதலீர். நம்பி நறையூரர், - மன்னுலகில்
என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்,
மன்னு மடலூர்வன் வந்து.

மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி
ஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர்
தாள் என்றி மற்று μர் சரண் இல்லை என்று தரும் தடக்கை
வாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே

   பாசுரங்கள்


    'என்னால் தரப்பட்டது' என்றலுமே,*  அத்துணைக்கண்-

    மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேல்எடுத்த- 



    பொன்னார் கனைகழல்கால் ஏழ்உலகும் போய்க்கடந்து,*  அங்கு-
    ஒன்றா அசுரர் துளங்க செலநீட்டி,*

    மன்னிவ் அகல்இடத்தை மாவலியை வஞ்சித்து,*
    தன்உலகம் ஆக்குவித்த தாளனை,*  -தாமரைமேல்-


    மின்இடையாள் நாயகனை விண்நகருள் பொன்மலையை,*
    பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,*

    தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,*
    மன்னிய தண்சேறை வள்ளலை, -மாமலர்மேல்-


    அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*
    என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)
    கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*

    மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-
    பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*
    மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்- 


    பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,*
    தொல்நீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,*

    என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,*
    மன்னும் கடல்மல்லை மாயவனை,*  -வானவர்தம்-


    சென்னி மணிச்சுடரை தண்கால் திறல்வலியை,*
    தன்னைப் பிறர்அறியாத் தத்துவத்தை முத்தினை,*

    அன்னத்தை மீனை அரியை அருமறையை,*
    முன்னிவ் உலகுஉண்ட மூர்த்தியை,*  -கோவலூர்- 


    மன்னும் இடைகழி எம் மாயவனை,*  பேய்அலறப்,-

    பின்னும் முலைஉண்ட பிள்ளையை,* -அள்ளல்வாய்-



    அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,*

    தென்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை,*



    மின்னி மழைதவழும் வேங்கடத்து எம் வித்தகனை,*
    மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,*

    கொல்நவிலும் ஆழிப் படையானை,* -கோட்டியூர்-



    மன்னு மதிள்கச்சி வேளுக்கை ஆள்அரியை,*

    மன்னிய பாடகத்து எம் மைந்தனை* -வெஃகாவில்-



    உன்னிய யோகத்து உறக்கத்தை,*  ஊரகத்துள்-
    அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை,*

    என்னை மனம்கவர்ந்த ஈசனை,* -வானவர்தம்-



    முன்னவனை மூழிக்களத்து விளக்கினை,*
    அன்னவனை ஆதனூர் ஆண்டுஅளக்கும் ஐயனை,*

    நென்னலை இன்றினை நாளையை,* -நீர்மலைமேல்-



    மன்னும் மறைநான்கும் ஆனானை,* புல்லாணித்-
    தென்னன் தமிழை வடமொழியை,*  நாங்கூரில்-

    மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,*
    நல்நீர் தலைச்சங்க நாள்மதியை,* -நான்வணங்கும்-


    கண்ணனை கண்ண புரத்தானை,* தென்னறையூர்-
    மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,*
    கல்நவில்தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது*

    என்நிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,*
    தன்அருளும் ஆகமும் தாரானேல்,*  - தன்னைநான்- 


    மின்இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்,*
    தன்அடியார் முன்பும் தரணி முழுதுஆளும்,*

    கொல்நவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்*
    தன்நிலைமை எல்லாம் அறிவிப்பன்,*  -தான்முனநாள்- 


    மின்இடை ஆய்ச்சியர்தம் சேரிக் களவின்கண்,*

    துன்னு படல்திறந்து புக்கு,* -தயிர்வெண்ணெய்- 



    தன்வயிறுஆர விழுங்க,* கொழுங்கயல்கண்-
    மன்னு மடவோர்கள் பற்றிஓர் வான்கயிற்றால்*
    பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,*
    அன்னதுஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்*
    துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,*
    முன்இருந்து முற்றதான் துற்றிய தெற்றெனவும்*
    மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்த்,*

    தன்னை இகழ்ந்துஉரைப்ப தான்முனநாள் சென்றதுவும்,*
    மன்னு பறைகறங்க மங்கையர்தம் கண்களிப்ப,*
    கொல்நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம்ஆடி,*
    என்இவன் என்னப்படுகின்ற ஈடறவும்,*
    தென்இலங்கை ஆட்டி அரக்கர் குலப்பாவை,*
    மன்னன் இராவணன்தன் நல்தங்கை,*  -வாள்எயிற்றுத்-


    துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வுஎய்தி,*
    பொன்நிறம் கொண்டு புலர்ந்துஎழுந்த காமத்தால்,*
    தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கு அரிந்து,*

    மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலைபோலும்,*
    தன்னிகர் ஒன்றுஇல்லாத தாடகையை* (2 ) மாமுனிக்கா-


    தென்உலகம் ஏற்றுவித்த திண்திறலும்* -மற்றுஇவைதான்-
    உன்னி உலவா உலகுஅறிய ஊர்வனநான்,*

    முன்னி முளைத்துஎழுந்து ஓங்கி ஒளிபரந்த,*
    மன்னியபூம் பெண்ணை மடல்